தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் SUNDAY 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது . ஈரோட்டில் அதிகபட்சமாக 40.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது .
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழக முழுவதும் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பான வரம்பிற்க்குள் இருந்து வந்தன சில பகுதிகளில் இயல்பை விட சற்று அதிகமாக உள்ளது .
தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோரப் பகுதிகள் சாதாரண வெப்பநிலையை அனுபவிக்கும் அதே வேளையில் உள் தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பாக்கெட்டுகள் கணிசமாக அதிக வெப்பநிலையை கண்டன.
ERODE HOTTEST &OOTY COLDEST
தமிழகத்தின் மற்ற உள்பகுதிகளில் உள்ள சமவெளிகளில் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி வரை பதிவாகும் . தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோரப் பகுதிகளில் 34 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையும் . மலைப்பகுதிகளில் 22 டிகிரி முதல் 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் (RMT) படி தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும் ,இடியுடன் கூடிய மழை மின்னல் மற்றும் 30-40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று ஒன்று மற்றும் இரண்டு இடங்களில் காணப்படலாம் .
முக்கிய பகுதிகளான :-
*நீலகிரி
*கோயம்புத்தூர்
*ஈரோடு
*தேனி
*திண்டுக்கல்
*விருதுநகர்
*தென்காசி
*திருநெல்வேலி
*கன்னியாகுமரி
ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்கலில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வானிலை மையம் தலைவர் ராஜா ராமசாமி கூறுகையில் மேகங்கள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்கின்றது. காற்று கிழக்கு திசையை நோக்கி நகன்றால் மட்டுமே சென்னையில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இல்லை.
மேலும் செய்தி தொடர்புக்கு :- Click Here
0 Comments